உலகின் மிகப்பெரிய விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு ராட்சத பலூன் போல காட்சியளிக்கும் இந்த ஆகாய கப்பல் சாதாரண விமானங்களை விட பல்வேறு சிறப்பம்சங்களையும், பயன்களையும் கொண்டிருக்கிறது.
ஏர்லேண்டர் எச்ஏவி304 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட 300 அடி நீளம் கொண்ட இந்த ஆகாய கப்பல் அமெரிக்க ராணுவத்துக்காக இங்கிலாந்தை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால், கடந்த 2013ம் ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட்டில் 40 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த விமானத்தை வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் அந்த விமானம் திரும்ப ஹைபிரிட் வெகிக்கிள்ஸ் நிறுவனத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
அமெரிக்கா கைவிட்டாலும், இங்கிலாந்து அரசின் நிதி ஒத்துழைப்புடன் இந்த ஆகாய கப்பலை ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தற்போது தயாரிப்பு நிலையை எட்டியிருக்கும் இந்த விமானத்திற்கு ஏர்லேண்டர்-10 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானம் 240 அடி நீளம் கொண்டது. ஆனால், இந்த விமானம் 302 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது. அதாவது, ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்கு வடிவம் கொண்டது.
மேலும் ஏர்லேண்டர்-10 ஆகாய கப்பல் மூன்று வாரங்களுக்கு தரையிறங்காமல் வானில் பறக்கும் திறன் கொண்டது. இதனால், கண்காணிப்பு பணிகளுக்கு மிக ஏற்றதாக இருக்கும். இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் இயக்கக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ கண்காணிப்பு, மீட்புப் பணிகள், ராட்சத தளவாடங்களை எடுத்துச்செல்வதற்கான சாதனமாகவும் இருக்கும். தவிரவும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகளையும் கொண்டிருக்கும். ஒரே இடத்தில் கூட பல நாட்கள் பறக்க விட முடியும்.
இது பிற விமானங்களை காட்டிலும் 70 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் கொண்டது. இந்த விமானத்தை மேலே எழுப்புவதற்கு 60 சதவீதம் ஹீலியம் வாயுவும், 40 சதவீதம் டீசலும் பயன்படுகிறது. இதற்காக, இந்த விமானத்தில் 4 வி8 டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழுவதுமாக மின் மோட்டார்கள் மூலமாக இயக்கக்கூடிய ஏர்லேண்டரையும் தயாரிக்கும் திட்டம் உள்ளதாம். பிற விமானங்களை போன்று அதிவேகத்தில் பறந்து செல்லாது. அதிகபட்சமாக மணிக்கு 148 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், இடைநில்லாமல் 3 வாரங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.
ஏர்லேண்டர் எச்ஏவி304 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட 300 அடி நீளம் கொண்ட இந்த ஆகாய கப்பல் அமெரிக்க ராணுவத்துக்காக இங்கிலாந்தை சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெகிக்கிள்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால், கடந்த 2013ம் ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட்டில் 40 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த விமானத்தை வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் அந்த விமானம் திரும்ப ஹைபிரிட் வெகிக்கிள்ஸ் நிறுவனத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
அமெரிக்கா கைவிட்டாலும், இங்கிலாந்து அரசின் நிதி ஒத்துழைப்புடன் இந்த ஆகாய கப்பலை ஹைபிரிட் ஏர் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. தற்போது தயாரிப்பு நிலையை எட்டியிருக்கும் இந்த விமானத்திற்கு ஏர்லேண்டர்-10 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானம் 240 அடி நீளம் கொண்டது. ஆனால், இந்த விமானம் 302 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது. அதாவது, ஒரு கால் பந்தாட்ட மைதானம் அளவுக்கு வடிவம் கொண்டது.
மேலும் ஏர்லேண்டர்-10 ஆகாய கப்பல் மூன்று வாரங்களுக்கு தரையிறங்காமல் வானில் பறக்கும் திறன் கொண்டது. இதனால், கண்காணிப்பு பணிகளுக்கு மிக ஏற்றதாக இருக்கும். இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் இயக்கக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ கண்காணிப்பு, மீட்புப் பணிகள், ராட்சத தளவாடங்களை எடுத்துச்செல்வதற்கான சாதனமாகவும் இருக்கும். தவிரவும், பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகளையும் கொண்டிருக்கும். ஒரே இடத்தில் கூட பல நாட்கள் பறக்க விட முடியும்.
இது பிற விமானங்களை காட்டிலும் 70 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் கொண்டது. இந்த விமானத்தை மேலே எழுப்புவதற்கு 60 சதவீதம் ஹீலியம் வாயுவும், 40 சதவீதம் டீசலும் பயன்படுகிறது. இதற்காக, இந்த விமானத்தில் 4 வி8 டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழுவதுமாக மின் மோட்டார்கள் மூலமாக இயக்கக்கூடிய ஏர்லேண்டரையும் தயாரிக்கும் திட்டம் உள்ளதாம். பிற விமானங்களை போன்று அதிவேகத்தில் பறந்து செல்லாது. அதிகபட்சமாக மணிக்கு 148 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால், இடைநில்லாமல் 3 வாரங்கள் வரை பறக்கும் வசதி கொண்டது.

No comments:
Post a Comment